Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செங்கல் சூளை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

டிசம்பர் 03, 2022 12:56

கவுகாத்தி: அசாமின் கச்சார் மாவட்டத்தில் உள்ள ஒரு செங்கல் சூளையில், புகைபோக்கி இடிந்து விழுந்ததில் 12 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 6 பேர் காய மடைந்தனர். கச்சார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நுமல் மஹத்தா கூறுகையில், "சில்சார் நகரத்திலிருந்து சுமார் 29 கிமீ தொலைவில் உள்ள கலயான் பகுதியில் வெள்ளிக் கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. 

இன்று காலை நிலவரப்படி, இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது. காயமடைந்த மேலும் 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது" என்று கச்சார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நுமல் மஹத்தா தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்